சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளத்தூர் மெயின் ரோட்டில் அரசு டாஸ்மாக் கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடையில் இரவில் கடையில் சூப்பர்வைசர் பூமிநாதன் மற்றும் உதவியாளர்கள் இரண்டு பேர் அன்றைய விற்பனையின் கணக்குகளை சரிபார்த்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென மண்ணெண்ணெய் பாட்டிலில் தீ வைத்து டாஸ்மாக் கடைக்குள் வீசிவிட்டு தப்பிய உள்ளார். இதனால் டாஸ்மாக் கடையில் இருந்த அட்டைப் பெட்டிகள் தீப்பிடித்து எறிய தொடங்கியுள்ளது.

இந்நிலையில் சூப்பர்வைசர் பூமிநாதன் மற்றும் ஊழியர்களும் தீயை அணைக்க போராடினர். இருப்பினும் பணம்  ரூ.10,900 மற்றும் 25 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்கள் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இது குறித்து கடையின் சூப்பர்வைசர் பூமிநாதன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் வழக்கு பதிவு செய்து மதுக்கடை மீது மண்ணெண்ணெய் குண்டு வீசிய மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.