தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் தாசில்தார்  அலுவலகத்தில் கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் பூர்ணிமா தலைமையில் நில உடமை மேம்பாட்டு திட்டம் திருத்தம் மற்றும் சிறப்பு பட்டா மாறுதல் மேல்முறையீடு கணினி திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது.  கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் கார்த்திகேயன், மண்டல துணை தாசில்தார்கள் பிரியா, தாசில்தாரர் பூங்கொடி, விவேகானந்தம், கூடுதல் தலைமை இடத்தில் துணை தாசில்தார் மற்றும் பலர் இந்த முகாமில்  கலந்து கொண்டனர். இந்த முகாமில் 26 திருத்தம் தொடர்பான மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.