விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காரைக்குடி வைரவபுரத்தைச் சேர்ந்த ஏஜென்ட் வைரவபாலன் என்பவரிடம் சிங்கப்பூரில் வேலை பெறுவதற்காக ரூ.3 லட்சத்து 57 ஆயிரம் கொடுத்துள்ளார். அந்த பணத்தை வாங்கிக் கொண்ட வைரவபாலன் சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக உறுதியளித்துள்ளார். ஆனால் அவர் கூறியபடி ராமச்சந்திரனுக்கு நீண்ட நாட்களாக வேலை பற்றிய எந்த ஒரு தகவலையும் தெரிவிக்கவில்லை.

இதனால் ராமச்சந்திரன் எனக்கு வேலை வேண்டாம் பணத்தை திருப்பி கொடுங்கள் என கேட்டு இருக்கின்றார். அதற்கு வைரவபாலன் பல்வேறு காரணங்களை கூறி பணத்தை கொடுக்காமல் நீண்ட காலம் ஏமாற்றி வந்துள்ளார். அதன் பின் ராமச்சந்திரன் இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார்  வைரவபாலனை தேடி வருகின்றனர்.