கோவையை அடுத்த வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் பகுதியில் வசிப்பவர் சலீம் (49). பெயிண்டரான  இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில், 34 வயதுள்ள ஒரு பெண்ணுடன்  கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பழக்கம் ஏற்பட்டது. ஆனால் அந்த பெண்ணிற்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததாகவும், அதை   அந்த பெண்ணிற்கே தெரியாமல் ஆபாசமாக சலீம் தனது செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளதாகவும் தெரிகிறது. இதனால் கள்ளக்காதலர்கள் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு, அந்த பெண் அவரை சந்தித்து பேசுவதை தவிர்த்துள்ளார்.

இதனையடுத்து சலீம், தான் எடுத்து வைத்திருந்த அந்த பெண்ணின் ஆபாச புகைப்படங்களை வைத்து அந்த பெண்ணிடம் பணம் பறிக்க திட்டமிட்டுள்ளார். பின் அவர் கடந்த 6-ஆம் தேதி அந்த பெண்ணின் அக்காவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரிடம் தனது கள்ளக்காதல் பற்றியும்,  செல்போனில் உள்ள அவரது தங்கையின் ஆபாச புகைப்படங்களையும் அவரிடம் காண்பித்தார். எனவே தனக்கு பணம் தரவில்லை என்றால் இந்த ஆபாச புகைப்படங்களை எல்லாம் சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக அவரை மிரட்டியுள்ளார்.

இதை கேட்டுக் கொண்டிருந்த அவளது சகோதரி திடீரென செல்போனை துண்டித்துள்ளார். பின் இந்த கள்ளக்காதல் தொடர்பான விவகாரம் உறவினர்களுடைய தெரிந்தால் அவமானம் ஏற்படும் என நினைத்து சிந்தனை செய்துள்ளார். பின் நேற்று முன்தினம் காலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே அங்கு வந்த போலீசார்  பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் அவரது சாவுக்கு காரணமான சலீம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, அவர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அவரை போலீசார் விசாரணைக்காக தேடுவதை அறிந்து, பயத்தினால் விஷம் அருந்தியுள்ளார். பின்னர் அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.