பணி நேரம் முடிந்ததும் தானாகவே சிஸ்டம் ஷட் டவுன் ஆகும் நடைமுறை மத்திய பிரதேசத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த தனியார் ஐடி நிறுவனம் தனது ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது .

பணி நேரம் முடிந்ததும் கணினி தானாகவே ஷட் டவுன் செய்து கொள்ளும் இந்த நடைமுறையை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பணியாளர்களின் வேலை நேரம் சீராக இருக்கும் என்றும் ஊழியர்கள் எவ்வித மன அழுத்தமும் இன்றி பணியாற்றுவார்கள் என்றும் அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.