உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் இந்தியாவின் மிக முக்கியமான வரலாற்றுச் சின்னமாக விளங்குகிறது. மத்திய சுற்றுலா துறையின் கட்டுப்பாட்டில் கீழ் இருக்கும் தாஜ்மஹாலை பார்வையிட ஆயிரக்கணக்கான பயணிகள் தினம் தோறும் வந்து செல்கிறார்கள். அதன்படி தாஜ்மஹாலுக்கு வருகை தரும் இந்திய பார்வையாளர்கள் நபருக்கு 50 முதல் வெளிநாட்டினர் ஒரு நபருக்கு 1100 ரூபாய் வரை செலுத்தி டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். ஆனால் வருடத்தில் ஒரு சில குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் மக்கள் தாஜ்மஹாலை இலவசமாக பார்வையிடலாம்.

இந்நிலையில் ஷாஜஹானின் 368வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று முதல் 19ம் தேதி வரை ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை கட்டணமில்லாமல் சுற்றிப்பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.