செய்தியாளர்களிளிடம் பேசிய மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, நான் ஒன்னே ஒன்னு சொல்றேன்…   இப்ப நீங்க போறீங்க ஒரு இடத்துக்கு….. அங்க வந்து நீங்க என்ன மரியாதையா அப்படி கால்ல பூ போட்டு அழைச்சிட்டு  போகணும்னு யாருகிட்டயும் சொல்ல மாட்டீங்க…. மரியாதையா வங்காங்க,  உட்காருங்க அப்படின்னு சொல்லணும்னு நினைப்பீங்களா ? நினைக்க மாட்டீங்களா ? நினைப்பீங்க….  நம்மை  அறியாமல் நம்ம மனசு நினைக்கும்….

அதேபோலத்தான்,  மத்திய அரசும் – மாநில அரசும்……  மாநில அரசு என்றால், நான்  தமிழ் நாட்டை மட்டும் சொல்லல…  பொதுவா இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் சொல்றேன்…  நீங்க வந்து உட்கார்ந்துகிட்டு ஒன்றும் தெரியாம,  நீங்க என்ன உங்க அப்பா வீட்டு சொத்தா ? இதையெல்லாம் நீங்க கேட்கலாமா? கேட்கக்கூடாது.

நீங்க முறையா கேளுங்க…  எனக்கு இந்த வருஷத்தில் இருந்து இவ்வளவு கொடுக்காம இருக்கு. எங்க இதுல இருந்து வருவாய் இவ்வளவு வந்திருக்கு உங்களுக்கு…  அதுல வந்து நீங்க வந்து இவ்வளவு தான் கொடுத்து இருக்கீங்க…  எங்களுக்கு கொஞ்சம் கூட குடுங்க.…  எதிர்பார்க்காம இந்த நிகழ்வுகள் எல்லாம் நடந்துருச்சு அப்படின்னு சொல்லி,  நீங்க பக்குவமா பேசி வாங்குவதற்கு உங்களுக்கு திறமை இல்லை என தெரிவித்தார்.