நாமக்கல் மாவட்டத்திலுள்ள பொம்ம சமுத்திரம் ஈச்சவாரியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த திவ்யா என்பவருக்கும் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் சம்பவத்தன்று பிரபாகரன், திவ்யாவை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் மணமுடைந்த திவ்யா  அரளி விதையை அரைத்து குடித்துள்ளார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக திவ்யாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி  திவ்யா உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.