கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது பெற்றோர் கடந்த 8 வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டனர். இதனால் சிவகுமார் உறவினர் வீட்டில் தங்கி படித்தார். இதனையடுத்து பெங்களூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் கடந்த 6 ஆண்டுகளாக சிவகுமார் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பெங்களூரில் இருந்து குளித்தலையில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சிவகுமார் வந்தார். அப்போது அவருக்கு உறவினர்கள் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்ததாக தெரிகிறது.

அதற்கு சிவகுமார் தனக்கு திருமணம் வேண்டாம் என கூறி வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிவகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிவகுமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சிவகுமார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.