கடலூர் மாவட்டத்தில் உள்ள ம.புடையூர் கிராமத்தில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நல்லம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நல்லம்மாளின் பக்கத்து வீட்டில் வசிக்கும் கார்த்திகேயன் என்பவர் உங்களைப் போன்ற எனது மனைவிக்கும் தாலி சங்கிலி செய்ய வேண்டும். அதை கழற்றி கொடுத்தால் செல்போனில் படம் எடுத்து தருகிறேன் என்று கூறியுள்ளார். அதற்கு நல்லம்மாள் மறுப்பு தெரிவித்தார்.

இதனால் கார்த்திகேயன் மூதாட்டியின் முதுகில் கத்தியால் குத்தி விட்டு கழுத்திலிருந்த 3 பவுன் தாலி சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனால் வலியில் அலறி துடித்த நல்லம்மாளை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து புகாரின் பேரில் வழக்கப்பதிவு செய்த போலீசார் கார்த்திகேயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.