கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் கஸ்பா தெருவில் ஜெகன்(32) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக ஜெகனும், கல்பனா(30) என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு ஜெகனின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஜெகன் கல்பனாவை திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த கல்பனா கடந்த ஆண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். பின்னர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் விருதாச்சலம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர். அன்று இரவே ஜெகன் தலைமறைவானதால் கல்பனா தனது கணவரை கண்டுபிடித்து தருமாறு விருதாச்சலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஜெகனைதேடி வந்தனர். இந்நிலையில் திருமணமான அன்று கணவர் தலைமறைவானதால் மன உளைச்சலில் இருந்த கல்பனா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.