கேரளாவில் பறவை காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு பறவை காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த மாவட்ட சுகாதார இயக்குனர்களுக்கு பொது சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது. மேலும் நோய்வாய்ப்பட்ட மற்றும் உயிரிழந்த கோழி, வாழ்த்துக்கள் அருகே பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்றும் சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.