நடிகை ஸ்ருதிஹாசன் உடனான பிரிவு குறித்து அவருடைய முன்னாள் காதலர் சாந்தனு மௌனம் கலைத்து பேசியுள்ளார். சமீபத்தில் பாலிவுட் ஊடகம் ஒன்று, சாந்தனுவிடம் ஸ்ருதிஹாசன் உடனான பிரிவு குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு பதில் அளித்த அவர், மன்னித்து விடுங்கள், இது பற்றி பேச விரும்புவதில்லை, அது தனிப்பட்ட விஷயம் என்று அந்தக் கேள்வியை தவிர்த்து உள்ளார். இதனால் இருவருக்கும் பிரேக்கப் ஆனது உறுதியாகி உள்ளது.