வியட்நாமிற்குச் சுற்றுலா சென்ற பெங்களூரைச் சேர்ந்த தம்பதியினர் அங்கு தங்களுக்கு நேர்ந்த ஒரு விசித்திரமான அனுபவத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

மேலும் அவர்கள் வியட்நாமில் உள்ள ஒரு சொகுசுக் கப்பலில் பயணம் செய்தபோது, மற்ற நாட்டு சுற்றுலாப் பயணிகளிடமிருந்து இந்தியர்கள் மட்டும் தனியாகப் பிரிக்கப்பட்டு ஒரு தளத்தில் அமர வைக்கப்பட்டனர். பொதுவாகக் கப்பலில் பாதுகாப்பு வழிமுறைகள் முதலில் கூறப்படும் என்று எதிர்பார்த்த தம்பதியினருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

“>

இதனால் கப்பல் ஊழியர்கள் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு உணவு உண்ணும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும், கைகளால் உணவைத் தொடக் கூடாது, உணவை எடுக்கப் பயன்படும் நுகரிகளை எப்படிப் பயன்படுத்த வேண்டும் போன்ற அடிப்படை ஒழுக்க முறைகளை வகுப்பெடுப்பது போல் அறிவுறுத்தத் தொடங்கினர். ஆரம்பத்தில் இதைப் பார்த்து அந்தத் தம்பதியினர் கோபமடைந்து, இது இந்தியர்களுக்கு எதிரான இனவெறி மற்றும் பாகுபாடு செயல் என்று நினைத்தனர்.

ஆனால், பஃபே உணவு பரிமாறத் தொடங்கிய வெறும் ஐந்தே நிமிடங்களில் அவர்களின் எண்ணம் முற்றிலும் மாறியது. உணவு தயாராகக் கொஞ்சம் தாமதமானதால், அங்கிருந்த ஒரு இந்திய முதியவர் அங்கிருந்த வியட்நாம் ஊழியர்களைப் பார்த்து மிகக் கொடூரமாகக் கத்தி சத்தம் போடத் தொடங்கினார். கப்பல் ஊழியர்கள் எவ்வளவு பொறுமையாகக் கேட்டுக்கொண்ட போதிலும் அவர் தொடர்ந்து கத்தியது தங்களுக்குப் பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியதாக அந்தத் தம்பதியினர் கூறினர்.

இந்த ஒரு மோசமான சம்பவமே ஏன் தங்களுக்கு மட்டும் தனியாக ஒழுக்கப் பாடங்கள் எடுக்கப்பட்டன என்பதைப் புரிய வைத்ததாகக் குறிப்பிட்ட அவர்கள், வெளிநாடுகளுக்குச் செல்லும்போது இந்தியர்கள் நம் நாட்டின் பிரதிநிதிகள் என்பதை உணர்ந்து கண்ணியத்துடனும், மரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளனர்.