சென்னை மாவட்டத்தில் உள்ள தரமணி கானகம் களிக்குன்றம் பகுதியில் குணசீலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் குணசீலன் தனது நண்பரை பார்ப்பதற்காக பரங்கிமலை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எங்கிருந்தோ பறந்து வந்த காற்றாடி மாஞ்சா நூல் குணசீலன் மீது விழுந்தது. உடனடியாக குணசீலன் கையால் கயிற்றை பிடித்தார். ஆனாலும் கழுத்து மற்றும் குணசீலனின் வலது கை மோதிர விரலில் மாஞ்சா கயிறு அறுத்து காயம் ஏற்பட்டது. பின்னர் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இதுகுறித்து பரங்கிமலை போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.