கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போத்தனூர் சாய் நகரில் பரக்கத்துல்லா என்பவர் வசித்து வருகிறார். இவர் சுல்தான் பேட்டை பகுதியில் இரும்பு கம்பிகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த ஜனவரி மாதம் 14-ஆம் தேதி பரக்கத்துல்லா ஆந்திராவை சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் இரும்பு கம்பிகள் வாங்குவதற்கு முடிவு செய்தார். இதற்காக ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் அந்த நிறுவனத்திற்கு பரக்கத்துல்லா 18 லட்ச ரூபாயை அனுப்பியுள்ளார்.

ஆனால் அவர்கள் இரும்பு கம்பிகளை அனுப்பி வைக்கவில்லை. இது தொடர்பாக கேட்டபோது அந்த நிறுவனத்தினர் பல்வேறு காரணங்களை கூறி காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனையடுத்து அந்த நிறுவனத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பரக்கத்துல்லா போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.