கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலையில் புகழ்பெற்ற மாசாணி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமியை தரிசித்து செல்கின்றனர். இந்த கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

இதில் கோவில் அறங்காவலர்கள் குழு தலைவர் முரளி கிருஷ்ணன், அறங்காவலர்கள் மஞ்சுளா தேவி, திருமுருகன், மருதமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் உண்டியல் காணிக்கையாக மொத்தம் 84 லட்சத்து 14 ஆயிரத்து 191 ரூபாய், 362 கிராம் தங்கம், 729 கிராம் வெள்ளி ஆகியவை வசூலானது.