ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை மற்றும் லக்னோ அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் லக்னோ அணியின் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் மீண்டும் விளையாட இருக்கிறார். இவர் 2 போட்டிகளில் விளையாடி அபாரமாக பந்து வீசினார். இவருடைய பந்துவீச்சால் எதிரணியினர் சிக்சர் அடிக்க முடியாமல் திணறினர். இவர் சுமார் 155 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி எதிரணியரை திணறடித்தார். இவர் அதிவேகமாக பந்து வீசினாலும் துல்லியமாகவும் பந்து வீசினார்.

இவர் 2 போட்டிகளில் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார். இவர் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகி இருந்த நிலையில் தற்போது மீண்டும் இன்று நடைபெறும் போட்டியில் களம் இறங்குகிறார். இவர் இன்று மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக நடைபெறும் போட்டியில் விளையாடுவதற்கு அனைத்து விதமான டெஸ்டிலும் தேர்ச்சி பெற்றுவிட்டார். இந்த தகவலை லக்னோ அணியின் பயிற்சியாளர் மோர்கல் தெரிவித்துள்ளார். மேலும் லக்னோ அணி இதுவரை விளையாடிய போட்டிகளில் 5-ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.