ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தமிழக சுழற் பந்துவீச்சாளரான அஸ்வின் விளையாடி வருகிறார். இவர் இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். அவர் ஒரு ஓவருக்கு 9 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தும் விக்கெட் வீழ்த்த முடியாமல் தவித்து வருகிறார். இது தொடர்பாக தற்போது இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் பேசியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, அஸ்வின் ரன்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் விக்கெட் வீழ்த்தும் பந்துகளை தவிர்த்து வருகிறார். அவர் ரன்களை விட்டுக் கொடுத்தாலும் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்புடன் விளையாடுவதில்லை. எனவே இனிவரும் போட்டிகளில் என்னை பொருத்தவரை நான் அவரை சேர்க்க மாட்டேன். மேலும் அடுத்த ஐபிஎல் ஏலத்தில் அஸ்வின் விற்கப்படாமல் கூட போகலாம் என்று கூறியுள்ளார்.