ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில் தொடக்க வீரர்களாக பிரித்விஷா மற்றும் ஜேக் பிரேசர் ஆகியோர் களமிறங்கினர். இவர்கள் முறையே 13 மற்றும் 12 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த அபிஷேக் பொரேல் 18 ரன்களிலும், சாய் கோப் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தார்.

இதைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ரிஷப் பண்ட் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில் அக்சர்படேல் 15 ரன்களில் ஆட்டம் இழந்தார். இந்த அணியின் அதிகமாக குல்தீப் யாதவ் 34 ரன்கள் எடுத்தார். இறுதியில் டெல்லி அணி 9 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை குவித்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணி 16.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை குவித்தது. இதன் மூலம் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக பில் சால்ட் 68 ரன்களை எடுத்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 2-ம் இடத்தில் இருக்கும் நிலையில் அடுத்து வரும் 4 போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் உறுதி செய்து விடும். மேலும் டெல்லி அணி எஞ்சியிருக்கும் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டும் தான் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும்.