ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி வருகின்ற ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கு பிறகு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ஓய்வு பெற வேண்டும் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, பல காலம் விளையாடி முன்னணி வீரர்களாக வலம் வரும்போது அவர்களின் வயது பற்றி விமர்சனங்கள் எழும். உங்களது பார்மை மறந்துவிட்டு வயதைப் பற்றி பேச தொடங்குவார்கள்.

இந்தியாவின் தலைசிறந்த வீரர்களாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் இருக்கிறார்கள். அவர்கள் விரும்பும் போது ஓய்வு பெற தகுதியானவர்கள். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் தங்கள் ஓய்வு பற்றி முடிவு எடுக்கலாம். ஆனால் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நான் இளம் வீரர்கள் பலரை காண விரும்புகிறேன். அது மூத்த வீரர்களின் வேலைப்பளுவை குறைக்கும். இந்த 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு இளம் வீரர்கள் பலர் அணிக்குள் வந்து அடுத்த உலக கோப்பை போட்டியில் விளையாட வேண்டும். மேலும் இந்த உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் ஓய்வு பெற வேண்டும் என்று கூறினார்.