திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யனார்பட்டியில் விவசாயியான ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரமன் என்ற தம்பி உள்ளார். இந்நிலையில் அண்ணன் தம்பிக்கு இடையே பொது கிணற்றில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கிணற்றில் இருந்த குழாய்களை பரமன் உடைத்ததாக தெரிகிறது.

இதனை ராமசாமி தட்டி கேட்டபோது கோபத்தில் பரமன் தனது அண்ணனை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் காயமடைந்த ராமசாமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பரமனை கைது செய்தனர்.