கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ரத்தினபுரி பகுதியில் வினிதா(22) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் கலெக்சன் ஏஜெண்டாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வினிதா வங்கியில் கடன் வாங்கிவிட்டு மாத தவணை கட்டாமல் இருந்த கிருஷ்ணராயபுரத்தைச் சேர்ந்த வினோத்(27) என்பவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கடன் தொகையை கட்டுவது குறித்து கேட்டுள்ளார்.

அப்போது வினோத் வினிதாவிடம் தகாத முறையில் பேசி பணம் கட்ட மறுத்ததாக தெரிகிறது. மேலும் நண்பர் ஒருவரை செல்போன் மூலம் அழைத்து வினிதாவை கிண்டல் செய்து பேசி உள்ளார். இதுகுறித்து வினிதா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வினோத்தை கைது செய்தனர்.