கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுண்டபாளையம் ரோடு பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேணுகா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்ட ரேணுகா பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் தனது வீட்டின் இரண்டாவது மாடியில் நின்று கொண்டிருந்த ரேணுகா திடீரென கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரேணுகாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.