கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த 18 வயதுடைய கல்லூரி மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் மேட்டுப்பாளையம் அரசு கலை கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். இந்நிலையில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருக்கும் மருந்துகடையில் கோபி என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நான் அந்த கடையில் வேலை பார்த்தபோது, எனக்கும் கோபிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி வெளியே சென்று வந்தோம். கடந்த சில நாட்களுக்கு முன்பு பங்களாமேடு பகுதியில் இருக்கும் ஒருவரது வீட்டிற்கு என்னை அழைத்து சென்று கோபி பாலியல் தொந்தரவு அளித்து, எனக்கு தெரியாமல் அதனை செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து கோபியின் நடத்தை மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக கேட்டபோது வேறு ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், உனது ஆபாச புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் எனவும் கோபி மிரட்டுகிறார். மேலும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு எனது ஆபாச புகைப்படத்தை கோபி சமூக வலைதளத்தில் வெளியிட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கோபியை கைது செய்தனர்.