கடலூர் மாவட்டத்தில் உள்ள அதர் நத்தம் கிராமத்தில் அசோக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கிரேசி(23) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 2 1/2 வயதில் மகன் இருக்கிறான். வெளிநாட்டில் வேலை பார்த்த அசோக் குமார் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் கோபத்தில் கிரேசி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

நேற்று முன்தினம் அசோக்குமார் தனது மாமியார் செல்வியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தன்னுடன் கிரேசியை குடும்பம் நடத்த அனுப்பி வைக்குமாறு தெரிவித்தார். இதனால் செல்வி தனது மகளுக்கு அறிவுரை வழங்கியதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த கிரேசி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிரேசியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.