கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து வெங்கடாசலம் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் விளம்பாவூர் அருகே சென்ற போது வெங்கடாசலம் முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிரே பெருமாள் என்பவர் ஒட்டி வந்த லாரியும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் மணவாளன், தர்ஷன் உள்பட 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்தில் சிக்கிய வாகனங்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.