கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் மாந்தோப்பு தெருவில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு 7 மணிக்கு ராஜேந்திரன் டீ போட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

இதனை பார்த்ததும் ராஜேந்திரனும், கடையில் இருந்தவர்களும் அலறியடித்து கொண்டு ஓடினர். இதனையடுத்து பொதுமக்கள் ஒன்று சேர்ந்து தண்ணீர் ஊற்றி கியாஸ் சிலிண்டரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.