திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யலூர் அருகே குறிஞ்சி நகரில் சங்கீதா(23) என்பவர் வசித்து வருகிறார். இவர் வேடசந்தூரில் இருக்கும் நூற்பாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த மூன்றாம் தேதி சங்கீதாவுக்கும் பாலத்தோட்டத்தைச் சேர்ந்த பாண்டிதுரை என்பவருக்கும் திருமணம் நடந்தது. கடந்த 8-ஆம் தேதி சங்கீதா தனது கணவருடன் தாய் வீட்டிற்கு விருந்திற்கு சென்றார்.

இதனையடுத்து வீட்டில் இருந்த சங்கீதா திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் உறவினர்கள் சங்கீதாவை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இந்நிலையில் சங்கீதாவின் தாய் தனது மகளை கண்டுபிடித்து தருமாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் திருமணமான ஐந்து நாட்களில் மாயமான புதுப்பெண்ணை தேடி வருகின்றனர்.