சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் கடந்த 9 ஆம் தேதி சீராளன் என்பவரின் வீட்டில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணி நடைபெற்ற்றுள்ளது. அப்போது செப்டிக் டேங்கில் இருந்து ஒரு ஆணின் சட்டை மற்றும் மனித எலும்பு கூடு உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இதுகுறித்த போலீசார் விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர்.

இந்த விசாரணையில் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு பாண்டியன் – சுகந்தி தம்பதியினர் வீட்டில் வசித்து வந்துள்ளனர். குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட கணவனை கொன்று செப்டிக் டேங்கில் சுகந்தி வீசியது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.