மதுரை மாவட்டத்திலுள்ள புங்கங்குளம் கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் செல்லப்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மலர்க்கொடி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினரின் மகள் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த மலர்கொடி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மலர்கொடி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.