திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பை மன்னார்கோவில் சுப்பிரமணியசாமி கோவில் தெருவில் சண்முகசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கணேசன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கணேசன் அம்பை கோவில் குளத்தில் இருந்து நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு இடைகால்-ஆலங்குளம் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக கணேசன் உயிர் தப்பினார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.