திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள செட்டிமேடு பகுதியில் 12- ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றுள்ளார். இதனை பார்த்ததும் இம்சனும், அவரது அண்ணன் வினோத்தும் சம்பந்தப்பட்ட மாணவரிடம் வேகமாக வந்ததாக கூறி தகராறு செய்தனர். இதனால் அவர்களுக்கு இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற அன்று புதூர் பிள்ளையார் கோவில் அருகே பிளஸ்-2 மாணவர் வந்துள்ளார்.

அப்போது இம்சனும், வினோத்தும் மாணவரை வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். கொலை மிரட்டலும் கொடுத்துள்ளனர். இதுகுறித்து மாணவர் களக்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் இம்சனை கைது செய்தனர். தலைமறைவான வினோத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.