திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருக்குறுங்குடி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மாடசாமி என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தந்தைக்கும், மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற அன்று முருகன் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மாடசாமி தனது தந்தையை கம்பால் தாக்கியுள்ளார்.

இதனை தடுக்க வந்த தாயையும் மாடசாமி தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த இருவரும் வள்ளியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மாடசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.