கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மருதூர் குறிச்சியில் கூலி வேலை பார்க்கும் சகாயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷைலா என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் சகாயராஜ் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். இதனையடுத்து வாந்தி எடுத்து சகாயராஜ் சாப்பிடாமலே தூங்க சென்றதாக தெரிகிறது.

நேற்று அதிகாலை பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்த தனது கணவரை ஷைலா பக்கத்தினரின் உதவியுடன் தக்கலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் சகாயராஜ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் அவர் உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.