கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் தளவாய்புரம் பகுதியில் வசிக்கும் செல்வ சித்ரா என்பவர் வடசேரி மேற்கு கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவர் லஞ்சம் வழங்குவதாக நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தது. நேற்று லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜ் தலைமையிலான போலீசார் வடசேரி மேற்கு கிராம நிர்வாக அலுவலகத்திற்குள் நுழைந்து அதிகாரிகளின் செல்போன்கள், ஸ்மார்ட் வாட்ச் போன்ற பொருட்களை வாங்கி வைத்துக்கொண்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் நடந்த சோதனையில் அதிகாரிகள் செல்வ சித்ராவின் பையில் இருந்த கணக்கில் வராத 17,853 ரூபாயை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண் அதிகாரி மீது குவிந்த புகார்கள்…. கணக்கில் வராத பணம் பறிமுதல்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!
Related Posts
தீமிதி விழாவுல செம சீன்…! திருடனுக்கே ஷாக் கொடுத்த பூசாரி மனைவி … சாமியாடியதால் தூக்குன இடத்துலேயே சிக்கிய 10 சவரன்…!
திருவள்ளூர் மாவட்டம், அடுத்த அய்யனேரி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று முன்தினம் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்…
Read more“உயிரோடு இருந்தால்தானே இப்படி செய்வ?”… பழ வியாபாரியின் வக்கிரம்.. கடப்பாரையால் மனைவியை அடித்துக்கொன்ற கொடூரம்… ஈரோட்டில் பயங்கரம்..!!
ஈரோடு அருகே உள்ள சோலார் நகரைச் சேர்ந்தவர் சேட்டு தனபால், இவர் தனது மனைவி புஷ்பாவுடன் இணைந்து தள்ளுவண்டியில் பழக்கடை நடத்தி வந்துள்ளார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில், தனது தந்தை ஆறுமுகத்திற்கும், மனைவி புஷ்பாவிற்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாகச்…
Read more