கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் தளவாய்புரம் பகுதியில் வசிக்கும் செல்வ சித்ரா என்பவர் வடசேரி மேற்கு கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவர் லஞ்சம் வழங்குவதாக நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தது. நேற்று லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜ் தலைமையிலான போலீசார் வடசேரி மேற்கு கிராம நிர்வாக அலுவலகத்திற்குள் நுழைந்து அதிகாரிகளின் செல்போன்கள், ஸ்மார்ட் வாட்ச் போன்ற பொருட்களை வாங்கி வைத்துக்கொண்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் நடந்த சோதனையில் அதிகாரிகள் செல்வ சித்ராவின் பையில் இருந்த கணக்கில் வராத 17,853 ரூபாயை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண் அதிகாரி மீது குவிந்த புகார்கள்…. கணக்கில் வராத பணம் பறிமுதல்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!
Related Posts
“டாஸ்மாக் கடையில் அரங்கேறிய பயங்கர மோதல்!”… நெல்லை அருகே வாலிபர் கல்லால் அடித்துக் கொலை.. கதறும் குடும்பத்தினர்…!!!
நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட திடீர் தகராறில், 25 வயது வாலிபர் ஒருவர் மிகக் கொடூரமான முறையில் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணாபுரம்…
Read more“இவங்க பண்றதுதான் சுத்த தற்குறி வேலை!” மேயர் பிரியாவை வெளுத்து வாங்கிய தவெக எம்.எல்.ஏ பல்லவி.. குத்துவிளக்கு மோதலின் க்ளைமாக்ஸ்..!!
“சென்னையில் அரசு பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் அரங்கேறிய குத்துவிளக்கு சர்ச்சை தற்போது திமுக மற்றும் தவெக இடையே அடுத்தகட்ட வார்த்தைப் போராக வெடித்துள்ள நிலையில், தவெக எம்.எல்.ஏ பல்லவி மேயர் பிரியாவிற்கு எதிராக நிகழ்ந்ததை விளக்கியுள்ளார். மேயர் பிரியாவின் புரோட்டோகால் விளக்கத்திற்கு…
Read more