கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த 2 பேர் போலீசார் வருவதை பார்த்ததும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அதில் ஒருவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் திருமலைபுரம் வசந்தம் காலணியில் வசிக்கும் அஞ்சு முத்து என்பது தெரியவந்தது.

இவர் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் முத்துவை கைது செய்து, அவரிடமிருந்த 3/4 கிலோ கஞ்சா, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய மற்றொருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.