கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜக்கார்பாளையம் பகுதியில் தென்னை நார் தொழிற்சாலை அமைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மகேந்தர் என்பவர் தனது மனைவி சரோஜினி, 12 வயது மகன் ஆகியோருடன் கோயம்புத்தூருக்கு வந்தார். பின்னர் அவர் தென்னை நார் தொழிற்சாலையில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த சரோஜினி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சரோஜினியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.