சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முடிக்கரையில் கண்ணப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இவருக்கு விஷால் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் விஷால் தனது நண்பரான சோபன் ராஜ் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் மறவமங்கலத்தில் இருந்து காளையார் கோவிலுக்கு சென்றுள்ளார்.

அப்போது வளையம்பட்டி அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த விஷாலும், சோபன் ராஜும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று வாலிபர்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.