தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் நகரில் இருக்கும் வின்னர்ஸ் ஸ்போர்ட்ஸ் மற்றும் தேனி மாவட்ட விளையாட்டு மற்றும் காது கேளாதோ சமூக நல சங்கம் சார்பில் காது கேளாத மற்றும் வாய் பேசாத மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டி கம்பம் கர்பானா மைதானத்தில் நடைபெற்றுள்ளது. இந்த போட்டியை டாக்டர் வேல் பாண்டியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று கிரிக்கெட் விளையாடியுள்ளனர். இதனையடுத்து வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.