திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் அஞ்சு வீடு அருவி பகுதி மிக ஆபத்தான அருவிகளில் ஒன்று. கடந்த 16-ஆம் தேதி 6 நபர்கள் அருவியில் குளித்தனர். அப்போது இரண்டு வாலிபர்கள் அருவியில் அடித்து செல்லப்பட்டனர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர், சேர்த்துப்பாறையச் சேர்ந்த கிராம மக்கள் ஆகியோர் இணைந்து வாலிபர்களை தேடி வந்தனர். நேற்று இரண்டு வாலிபர்களும் சடலமாக மீட்கப்பட்டனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர்கள் கோயம்புத்தூரில் இருக்கும் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் நசீர், கோகுல் என்பது தெரியவந்தது. பொங்கல் பண்டிகையை கொண்டாட ஊருக்கு வந்தபோது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு பலியானது தெரியவந்தது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.