சென்னையில் இருந்து கோலாலம்பூர் புறப்பட்ட விமானத்தில் திடீரென்று இயந்திர கோளாறு ஏற்பட்டதால் ஓடுதளத்தில் சென்று கொண்டிருந்த விமானம் அவசரமாக நிறுத்தப்பட்டது. மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் 160 பேருடன் நேற்று இரவு 12 : 20 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. அப்போது இயந்திர கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்துள்ளார்.

இதனால் விமானம் ஓடுதளத்திலேயே உடனடியாக நிறுத்தப்பட்டது. பின்னர் இழுவை வண்டி மூலமாக புறப்பட்ட இடத்திற்கு விமானம் கொண்டுவரப்பட்டது. இதனைத் தொடர்ந்து பயணிகள் சென்னையில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். முதலிலேயே இயந்திரக் கோளாறு கண்டுபிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.