கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு வி.கே ரோட்டில் சதீஷ்குமார்(25) என்பவர் வசித்து வருகிறார். கூலி வேலை பார்க்கும் சதீஷ்குமார் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து சமூக நல அதிகாரி திலகவதி விசாரணை நடத்தியதில் இரு தரப்பு பெற்றோர் சம்மதத்துடன் சிறுமிக்கு திருமணம் நடந்தது தெரியவந்தது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் பேரில் சதீஷ்குமார், அவரது தந்தை குருநாதன், சிறுமியின் தந்தை சுரேஷ், தாய் சுதா ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, 18 வயதிற்கு கீழ் இருக்கும் சிறுமிகளுக்கு திருமணம் செய்யக்கூடாது. இந்த குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே குழந்தை திருமணங்களை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்ட வருவதாக தெரிவித்துள்ளனர்.