திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோலப்பஞ்சேரி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முப்புதரில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 6 பேர் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். அவர்களில் இரண்டு பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் திருமழிசை உடையார் கோவில் பகுதியைச் சேர்ந்த வேலன் மற்றும் மணிமாறன் என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவர்கள் குற்ற செயல்களில் ஈடுபட திட்டமிட்டு இருந்தார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய 4 பேரை தேடி வருகின்றனர்.