காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள புத்தேரி பகுதியில் தமின் அன்சாரி என்பவர் பிரியாணி கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு இவரது கடையில் வியாபாரம் நடந்து கொண்டிருந்தபோது பாதுகாப்பு துறை அதிகாரி சந்திரசேகரன் கடைக்கு சென்று தீவிர சோதனை நடத்தினார். அவர் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்கள் மீது புகார் வந்திருப்பதாகவும் கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்து தமின் அன்சாரி கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் இதே கடையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி சென்றுள்ளனர்.

மீண்டும் சோதனை நடத்தியதால் மன உளைச்சலில் தனது குடும்பத்தினை கடைக்கு வரவழைத்து பெட்ரோல் பாட்டிலுடன் தீக்குளிக்க போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து சோதனை குறித்து ஆய்வு அறிக்கையை கடை சுவரில் அதிகாரி ஒட்டி சென்றுள்ளார். இதனால் கடையில் இருந்த வாடிக்கையாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.