விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிடாகம் பகுதியில் சட்ட விரோதமாக மணல் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பிடாகம் திருவிழா தோப்பு அருகே மணல் மூட்டையுடன் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

அந்த விசாரணையில் அவர்கள் ரகு, செல்வகுமார் என்பது தெரியவந்தது. இருவரும் மணலை கடத்தியுள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ரகு, செல்வகுமார் ஆகிய இருவரையும் கைது செய்து மணல் மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.