கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலையில் இருக்கும் தனியார் டிபார்ட்மென்ட் குணால்(19) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஆண்டு கல்லூரியில் சேர முடியாததால் குணால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த ஆண்டு ஆண்டிப்பட்டியில் இருக்கும் பாலிடெக்னிக் கல்லூரியில் குணால் விண்ணப்பித்திருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் கல்லூரியில் சேர்ந்து இந்த ஆண்டும் படிக்க முடியாதோ என்ற அச்சத்தில் இருந்த குணால் எலி மருந்தை தின்று மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி குணால் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.