கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுப்பேகவுண்டன் புதூரில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டனின் மனைவி கோவிலுக்கு சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த மணிகண்டன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த மணிகண்டனின் மனைவி தனது கணவர் தற்கொலை செய்து கொண்டதை கண்டு கதறி அழுதார். இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணிகண்டனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.