கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் பகுதியில் நேற்று மாலை நேரம் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதனால் சாலைகள் மற்றும் தெருக்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. இந்நிலையில் விருதாச்சலம் மணலூரில் வசிக்கும் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான தென்னை மரம் மின்னல் தாக்கி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மரத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.