பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஊட்டத்துறையில் சுரேஷ்(22) என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் பார்த்து வந்தார். இந்நிலையில் சுரேஷ் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்று கொண்டிருந்தார். அப்போது ஊட்டத்தூர் பிரிவு அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற கார் சுரேஷ் ஓட்டி சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த சுரேஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.